ஆப்நகரம்

ஊர்ல இருக்கப் பசுமாடுகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான்!

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு காஜா பேட்டையில் உள்ள பசு மடத்தில் சிறப்பு கோ பூஜை நடத்தப்பட்டது...

Samayam Tamil 15 Jan 2021, 5:42 pm
திருச்சி காஜா பேட்டையில் அமைந்துள்ளது பசு மடம். இந்த மடத்தில் ஜெர்சி, சிந்து, ஏச்.எஃப், கிருஷ், எருமை ஆகிய இனங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil ஊர்ல இருக்கப் பசுமாடுகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான்!
ஊர்ல இருக்கப் பசுமாடுகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான்!


பொங்கலை முன்னிட்டு இன்று இந்த பசு மடத்தில் கோ பூஜை நடைபெற்றது. இதையடுத்து இங்குள்ள பசு மாடு, கன்றுகளுக்கு அலங்காரம் செய்து, ஆரத்தி எடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பசு மாடுகளுக்குப் படையல் வைத்து சர்க்கரைப் பொங்கலை ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாடுகளுக்கு ஊட்டினர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் இந்தர்சந்த் லால், செயல்வீரர் மனோஜ்குமார், மேலாண்மை அறங்காவலர் சசிகுமார் ஜெயின், நிதி அறங்காவலர் தினேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

பாரம்பரியம் மாறாமல் கொண்டாட்டம்: அசத்தும் சிறிய கிராமம்!

அதேபோல் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள பிராணிகள் நலப் பாதுகாப்பு சங்கம் பசுமடத்தில் உள்ள பசு மாடுகள் மற்றும் கன்றுகளுக்குச் சிறப்புப் பூஜை செய்து கொண்டாடினர்.

அடுத்த செய்தி