ஆப்நகரம்

குப்பைகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி - தமிழக அரசின் அரசின் சூப்பர் திட்டம்!

தமிழகம் முழுவதும் உள்ள குப்பைக் கிடங்குகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து அதிலிருந்து மின்சாரம் எடுக்கும் பணி துவங்கியுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 May 2022, 11:44 am
தமிழக முதலமைச்சர் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் மூலம் பாசன ஆறுகள், வாய்க்கால்கள். மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்திற்கு 23,259 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.18.75 கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 90 பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு ஆழியாறு, கோரைஆறு, குடமுருட்டி மற்றும் கொடிகால் ஆகிய ஏரிகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
Samayam Tamil kn nehru minister says tamil nadu government plans to produce electricity from solid waste
குப்பைகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி - தமிழக அரசின் அரசின் சூப்பர் திட்டம்!


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
"தூர்வாரும் பணிகள் 75 சதவீதம் முடிந்துள்ளது. பணிகள் 10 நாட்களில் முடிவடையும். எந்தெந்த இடங்களில் குறுகலாக இருக்கின்றதோ அந்த இடங்களை அளந்து அகலப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும். ரூ.18.75 லட்சத்தில் பணிகள் முடிவடைய கொண்டிருக்கிறது. மீதி வேலைகளும் விரைவில் முடிக்கப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள குப்பைகளை சேரும் இடத்திலேயே பிரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து மக்காத குப்பைகளை கொண்டு மின்சாரம் எடுக்கும் பணி துவங்கியுள்ளோம். இந்தத் துறையின் செயலாளர் இந்தூர் சென்றுள்ளார். நகரத்தின் செயல்பாடுகளை முன்மாதிரியாக வைத்து எவ்வளவு விரைவாக செயல்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக செயல்படுத்தப்படும்" இவ்வாறு கூறினார்.


அமைச்சரின் இந்த ஆய்வின் போது, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மணிவாசன், தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் திருவேங்கட செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், காடுவெட்டி தியாகராஜன் பழனியாண்டி மற்றும் செயற்பொறியாளர் உதவி செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி