ஆப்நகரம்

திருச்சியில் மே 1 மதுபான கடைகள் இயங்காது! - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே 1 ஆம் தேதி மதுபான கடைகள் இயங்காது என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 28 Apr 2023, 6:11 pm

ஹைலைட்ஸ்:

  • திருச்சியில் மே 1 மதுபான கடைகள் இயங்காது
  • மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும்
  • ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை நடக்காது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார்
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார்
உழைப்பாளர்கள் தினம்
ஆண்டு தோறும் மே 1 ஆம் தேதி உழைப்பாளர்கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வருகிற திங்கட்கிழமை அன்று உழைப்பாளர் தினம் அனுசரிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் திருச்சியில் மே 1 மதுபான கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுபான கடைகள் மூடல்

2023 ஆம் ஆண்டு மே 1 திங்கட்கிழமை மே தினத்தினை முன்னிட்டு அன்றைய தினம் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FL1/FL2/FL3/FL3A/FL3AA & FL 11 அனைத்தும் மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மே தினத்தினை (திங்கட்கிழமை) முன்னிட்டு அன்றைய தினம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.
திருச்சி பாஜக துணை தலைவருக்கு கொலை மிரட்டல் - மாநகர காவல் ஆணையரிடம் புகார்!
பார்கள் மூடல்

அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA & FL11 வரையிலான ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும்.

கடுமையான நடவடிக்கை

மேலும், அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி