ஆப்நகரம்

நகர்புற தேர்தலை சூப்பராக திருச்சியில் நடத்தணும்: தேர்தல் ஆணையர் ஸ்பெஷல் பேச்சு!

நகர்ப்புற பகுதிக்கான தேர்தலை எப்போதும் போல் சிறப்பாக, சரியாக நியாயமாக நடத்திட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் பரணிகுமார் மண்டல ஆய்வு கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர்.

Samayam Tamil 27 Oct 2021, 12:38 pm
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் நடைபெற்றது.
Samayam Tamil நகர்புற தேர்தலை சூப்பராக திருச்சியில் நடத்தணும்: தேர்தல் ஆணையர் ஸ்பெஷல் பேச்சு!


திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர். மேலும் இவர்களுக்கான முறையான பயிற்சிகளும் வழங்கப்படது.

இந்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டத்தில் பேசிய மாநில தேர்தல் ஆனையர் பழனிக்குமார் :
எதிர்வரும் தேர்தலை சுமுகமாக, நியாமாக, எளிதாக நடத்துவதுதான் இந்த கூட்டத்தின் பிரதான நோக்கம்.

அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு கொடுத்து உள்ள பணிகளை நாம் சரியாக செய்ய வேண்டும். ஜனவரி 21 ஆம் தேதிக்குள் நமக்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கி உள்ளது. அதற்குள் நாம் எப்படி சிறப்பாக தேர்தலை நடத்தி முடிக்க போகிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

திருச்சி தாசில்தார் ஒரு லட்சம் லஞ்சம்: வீடு புகுந்த போலீசார் வேட்டையை தொடங்கினர்!
நமக்கு காலம் குறைவாக தான் உள்ளது. எனவே எவ்வளவு சிறப்பாக, சரியாக பணிகளை முடிக்க வேண்டுமோ அதை பொறுப்புடன் செய்ய வேண்டும்.

பகுதி நீதி சார்ந்த பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து உள்ளாட்சி கட்டமைப்புகள் சரி செய்யப்படுவதற்கான காலம் பிறந்துவிட்டது என மக்கள் பேசத் தொடங்கி உள்ளனர்.

அடுத்த செய்தி