திருச்சியைச் சேர்ந்த சந்திரசேகர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "திருச்சி, பொன்மலை 62 ஆவது வார்டில் 2013 ஆம் ஆண்டு 22 ஏக்கர் பரப்பளவில் பசுமைப் பூங்கா உருவாக்கப்பட்டது. இந்த பூங்கா மக்களின் பங்களிப்பாக 50 லட்ச ரூபாயும், அரசின் பங்களிப்பாக 1 கோடி ரூபாயும் சேர்த்து, ரூபாய் 1.5 கோடி செலவில் குழந்தைகள் அறிவார்ந்த நிலையில் விளையாடும் வண்ணம், உலக அதிசயங்களின் மாதிரிகளோடு விளையாட்டுக் கருவிகள், உடற்பயிற்சி,நடைபயிற்சிக்கான பாதைகள், மக்களின் வசதிக்காக கழிவறைகள் மற்றும் குடி, தண்ணீர் வசதி, ஓய்வெடுக்க ஆங்காங்கே இருக்கைகள், மாசில்லாகாற்றை சுவாசிக்க மரக்கன்றுகளுடன் பசுமைப் பூங்கா உருவாக்கப்பட்டது.
மேலும், மக்களுக்காக உருவாக்கப்பட்ட பசுமைப் பூங்காவில் நடப்பட்ட 1743 மரக்கன்றுகளையும் தொடர்ந்து பராமரிப்பதற்காக, மரக்கன்று ஒன்றுக்கு,3000 ரூபாய் வீதம் மக்களிடமே நிதி வசூலித்து, வங்கியில் வைப்பு நிதியாக சேமிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த பூங்கா பராமரிப்பு இன்றி முட்புதர்களால் சூழ்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வண்ணம் உள்ளத. இதனை பயன்படுத்தி பலர் பூங்காவின் உள்ளே சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, திருச்சி, பொன்மலை 62வது வார்டில் 22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பசுமைப் பூங்காவை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்." என்று சந்திரசேகர் தமது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கௌரி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு குறித்து நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நிதித் துறை செயலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
மேலும், மக்களுக்காக உருவாக்கப்பட்ட பசுமைப் பூங்காவில் நடப்பட்ட 1743 மரக்கன்றுகளையும் தொடர்ந்து பராமரிப்பதற்காக, மரக்கன்று ஒன்றுக்கு,3000 ரூபாய் வீதம் மக்களிடமே நிதி வசூலித்து, வங்கியில் வைப்பு நிதியாக சேமிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த பூங்கா பராமரிப்பு இன்றி முட்புதர்களால் சூழ்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வண்ணம் உள்ளத. இதனை பயன்படுத்தி பலர் பூங்காவின் உள்ளே சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, திருச்சி, பொன்மலை 62வது வார்டில் 22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பசுமைப் பூங்காவை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்." என்று சந்திரசேகர் தமது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கௌரி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு குறித்து நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நிதித் துறை செயலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.