ஆப்நகரம்

திருச்சி கலெக்டரிடம் ஊழல் மனு அளித்தவருக்கு அரிவாள் வெட்டு!

திருச்சி கலெக்டரிடம் ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்தவரை கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி சாய்த்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Jan 2021, 10:21 am
திருச்சி தா. பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சூரம்பட்டி கிராமத்தில், ஊராட்சி செயலர் கண்ணன் மற்றும் சேர்குடி ஊராட்சி மன்ற தலைவரின் மகன் அசோக் குமார் ஆகியோர் கழிவறை கட்ட ஒப்பந்தம் போட்டிருந்தனர். ஆனால் அப்படி எந்த கழிப்பறையும் கட்டவில்லை.
Samayam Tamil திருச்சி கலெக்டரிடம் ஊழல் மனு அளித்தவருக்கு அரிவாள் வெட்டு!
திருச்சி கலெக்டரிடம் ஊழல் மனு அளித்தவருக்கு அரிவாள் வெட்டு!


கழிப்பறையைக் கட்டாமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள இவர்கள், 100 நாட்கள் வேலைக்கு ஆட்கள் அனுப்பியதாகப் பொய்யான தகவல்களை அரசுக்கு அனுப்பியும் முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான ராமசந்திரன் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கலெக்டர் தலைமையில் குறிப்பிட்ட ஊழல் தொடர்பாகத் தணிக்கை உள்ளிட்ட விசாரணை நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு புகார் அளித்த ராமச்சந்திரனை ஐந்திற்கும் மேற்பட்டோர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.

முதல்வரின் வீட்டை முற்றுகையிட முயன்ற தாய், மகள்கள்... சேலத்தில் பரபரப்பு

இதில் படுகாயம் அடைந்த ராமசந்திரன் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதில் மாற்றுத் திறனாளியைக் கொலை செய்த முயன்றதாக முசிறி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு ஊராட்சி செயலர் கண்ணன், மோகன், பாலாஜி, துரைராஜ் மற்றும் அரவிந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் தலைமறைவாக உள்ள ஊராட்சி மன்றத்தலைவர் கோடி, சேர்குடி ஊராட்சி மன்ற தலைவரின் மகன் அசோக்குமார் மற்றும் மதிவாணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே தணிக்கைக் குழு தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அடுத்த செய்தி