ஆப்நகரம்

பிரச்சனைகள் மறைக்க மத மோதல்கள்; மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனம்!

மத்தியில் ஆளும் பாஜக பிரச்சனைகளை மூடி மறைப்பத்ற்காகவே மத மோதல்களை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Samayam Tamil 19 Jan 2022, 8:36 pm
தமிழகத்தில் கடந்த 1982ல் அனைத்து தொழிற்சங்கமும் இணைந்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. அப்போது மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஆதரவான ஊர்வலங்கள் நடைபெற்றது.
Samayam Tamil பிரதமர் மோடி
பிரதமர் மோடி


இந்த ஊர்வலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோர் பலியானார்கள். அவர்களுக்கு வருடம்தோறும் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதின் ஒரு பகுதியாக இன்று திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் சிஐடியு தொழிற்சங்கம் மற்றும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிஐடியு மாவட்ட தலைவர் ராமர் தலைமையில் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட்டது.

செருப்பு காட்டிய சீமானுக்கு சிறை?; நெருப்பு பறக்கும்..தமிழக அரசியல்!

மேலும், மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பாண்டியன், தங்கத்துரை உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ரங்கராஜன், ‘மத்திய மோடி அரசு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

என்னை சந்தித்தவர்கள் ஜாக்கிரதை; அமைச்சர் அதிரடி தகவல்!

பிரச்சனைகளை மூடி மறைப்பதற்காக மத மோதல்களை ஏற்படுத்துகின்றனர். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் ஆக்குவதை நிறுத்துவதற்கும், இந்த அத்தியாய ஆர்ப்பாட்டமாக நடத்தி வருகிறோம்’ என தெரிவித்தார்.

அடுத்த செய்தி