ஆப்நகரம்

யார் பார்த்த வேலையோ? - எம்ஜிஆர் சிலைக்கு காங்கிரஸ் துண்டால் முக்காடு!

திருச்சியில் மிக முக்கிய பகுதியான நீதிமன்றம் ரவுண்டானா அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு காங்கிரஸ் துண்டால் முக்காடு போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 11 Dec 2020, 5:52 pm
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அருகே எம்ஜிஆர் சிலை உள்ளது. அங்கு பராமரிப்பு பணிக்காக இன்று அங்கு வந்த நபர்கள், சிலையின் தலையில் காங்கிரஸ் துண்டால் முக்காடு போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக அதிமுகவினருக்கு தகவல் அளித்தனர்.
Samayam Tamil எம்ஜிஆர் சிலை திருச்சி
காங்கிரஸ் துண்டில் முக்காடு போடப்பட்ட எம்ஜிஆர் சிலை -திருச்சி


தகவலின் பேரில் அங்கு வந்த சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவகர் துண்டை அப்புறப்படுத்தியதுடன், இதுகுறித்து செஷன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திருச்சியின் முக்கிய பகுதியில் பட்டப்பகலில் எம்ஜிஆர் சிலைக்கு காங்கிரஸ் துண்டால் முக்காடு போட்ட சம்பவம் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி