மூத்த குடிமக்கள் பேரவையின் 24 ஆம் ஆண்டு விழா திருவாரூரில் நடைபெற்றது. இதில் உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் காவிரி ரெங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டு மூத்த குடிமக்களை கௌரவித்தனர்.
அதன் பின்னர், அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் கொரோனா தொற்று ஆயிரம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் மாநிலத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் இறக்கவில்லை என்ற நிலையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு தொடர்ந்து எடுக்கும்.
சாகும்வரை எடப்பாடி தொகுதியை விடமாட்டேன்... முதல்வர் அதிரடி
முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தலைவர்களோ, வேறு யாராவதோ என்ன சொன்னாலும் சரி... எங்களை பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
அவரை முதல்வராக தேர்ந்தெடுக்க தமிழக மக்கள் தயாராகி வருகிறார்கள் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதன் பின்னர், அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் கொரோனா தொற்று ஆயிரம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் மாநிலத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் இறக்கவில்லை என்ற நிலையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு தொடர்ந்து எடுக்கும்.
சாகும்வரை எடப்பாடி தொகுதியை விடமாட்டேன்... முதல்வர் அதிரடி
முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தலைவர்களோ, வேறு யாராவதோ என்ன சொன்னாலும் சரி... எங்களை பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
அவரை முதல்வராக தேர்ந்தெடுக்க தமிழக மக்கள் தயாராகி வருகிறார்கள் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.