ஆப்நகரம்

கொரோனா தடுப்பூசி...குடிக்காரர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்!

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 14 Jan 2021, 6:46 pm
பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு தடுப்பூசியை அனுப்பி வைத்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “ வரும்16ம் தேதி முதல் இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Samayam Tamil vijaya baskar


தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 5,36,500 கோவிட் தடுப்பூசி Dose உள்ளது. முதல்கட்டமாக 6 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மண்டலத்தில் 68,800 தடுப்பூசி புதுக்கோட்டை, திருவாரூர், கரூர், அரியலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9மாவட்டங்களுக்கு வந்துள்ளது. ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இன்னொரு சட்ட எரிப்புப் போராட்டம்... வேளாண் சட்டத்தை எரித்து போகி கொண்டாடிய விவசாயிகள்

தடுப்பூசி போட்ட உடன் எதிர்ப்பு சக்தி வந்துவிட்டது என பொதுமக்கள் எண்ணி விடக்கூடாது
முதல் டோஸ் போட்ட பின்பு 28 வது நாளில் 2 வது டோஸ் போட வேண்டும், அதனைத் தொடர்ந்து 42 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

மது உடல் நலத்திற்கு கேடானது. கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். எவ்வித அச்சமும் இன்றி அனைவரும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்ட அமைச்சர் தடுப்பூசி போடுபவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

தமிழ்நாட்டில் கோவிட் பாதிப்பு 10 சதவீதம் இருந்த நிலையில் தற்போது 1.2 சதவீதமாக குறைந்துள்ளது. தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். சமூக வலைகளில் தவறாக பரப்புவார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

அடுத்த செய்தி