ஆப்நகரம்

2 வயது குழந்தையுடன் தாய் தீக்குளிப்பு; கடிதத்தில் பரபரப்பு!

2 வயது குழந்தையுடன் தாய் தீக்குளித்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவர் எழுதி வைத்த கடித்தத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Samayam Tamil 24 Dec 2021, 11:05 am
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள வீரப்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரியா என்ற உமாமகேஸ்வரி (25). இவருக்கும், திருச்சி ராம்ஜிநகர் அடுத்துள்ள வண்ணான்கோவில் பகுதியை சேர்ந்த சந்துரு என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.
Samayam Tamil குழந்தையுடன் தற்கொலை செய்த பெண்
குழந்தையுடன் தற்கொலை செய்த பெண்



இவர்களுக்கு 2 வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணமான முதல் சந்துரு தனது மனைவி மற்றும் தாய் தந்தையுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

கணவர் சந்துரு புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூரில் உள்ள நியாய விலைக்கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். சந்துருவின் தாய்க்கும், மனைவி உமாமகேஸ்வரிக்கும் இடையே தொடர்ந்து தகராறு நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மதியம் உமாமகேஸ்வரி தனது 2 வயது குழந்தை ரித்திகாவுடன் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசுக்கு தெரிவித்தனர்.

தெறிக்க விட்ட திருமா; நீதித்துறை வட்டாரம் ஷாக்!

தகவலறிந்து ராம்ஜிநகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 2 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிகள் இயங்குமா?; மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

முதற்கட்ட விசாரணையில் மேலும் பிரியா தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் ஒன்று எழுதி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் சிந்துஜா தீவிர விசாரணை செய்து வருகிறார். குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி