ஆப்நகரம்

அதிமுக முசிறி எம்எல்ஏ காரில் ரூ. ஒரு கோடி பறிமுதல்: திருச்சியில் திக் திக்...

திருச்சி மாவட்டம் அதிமுக முசிறி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் காரில் ஒரு கோடி ரூபாயைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 24 Mar 2021, 8:49 am
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் தேர்தல் விதி அமலுக்கு வந்தது.
Samayam Tamil அதிமுக முசிறி எம்எல்ஏ காரில் ரூ. ஒரு கோடி பறிமுதல்: திருச்சியில் திக் திக்...


அதன்படி தமிழகத்தில் ரூபாய் 20 ஆயிரத்துக்கு மேல் கையில் ரொக்கமாக யாரும் கொண்டு செல்லக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதைக் கண்காணிக்கும் வகையில் மாவட்டந்தோறும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

“மாங்கா அமைச்சர்” கனிமொழி திருச்சி பிரச்சாரத்தில் மரண கலாய்!

இந்த சூழலில் திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த சோதனையில் முசிறி தொகுதி அதிமுக வேட்பாளர் செல்வராஜ் காரில் நடைபெற்ற சோதனையில் ரூ. ஒரு கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவர் தற்போது எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இரவு 10 மணி அளவில் வந்த காரை பறக்கும் படையினர் பெட்டை வாய்தலைப் பகுதியில் மறித்துச் சோதனையிட்டனர்.

அப்போது அவரது காரில் கட்டுக் கட்டாகப் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பணத்தைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினர் ஸ்ரீரங்கம் வட்டாட்சியரிடம் அதை ஒப்படைத்தனர்.
கணக்கிட்டதில் சுமார் ஒரு கோடி ரூபாய் இருப்பது தெரியவந்தது.

அடுத்த செய்தி