ஆப்நகரம்

திருச்சி போலீஸ் கஸ்டடியில் இளைஞர் மரணம்: தற்கொலை என வழக்குப் பதிவு!

காவல் நிலையத்தின் மாடியிலிருந்து குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Samayam Tamil 7 Feb 2021, 7:17 pm
திருச்சி முசிறி சிட்டிலறையை சேர்ந்தவர் பிரசாந்த். வயது 27. இவர் தனது உறவினரைக் கொலை செய்தது தொடர்பாகக் கடந்த 2012ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட கொலைக் குற்றவாளி.
Samayam Tamil திருச்சி போலீஸ் கஸ்டடியில் இளைஞர் மரணம்: தற்கொலை என வழக்குப் பதிவு!


இந்நிலையில் இவர் 16 வயது சிறுமியைத் திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஜம்புனாதபுரம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.

காவல் நிலைய மேல் தளத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, தான் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம் என்று தெரிந்த உடன், பிரசாந்த் தப்பிக்க முயன்றதாக போலீசார் கூறுகின்றனர்.

இந்த முயற்சி காரணமாக பிரசாந்த் காவல் நிலையத்தின் மேல் மாடியிலிருந்து குதித்தார் என போலீசார் கூறுகின்றனர். மேலும், பிரசாந்த் மாடியிலிருந்து குதித்தபோது தலையில் பலமாக அடிப்பட்டு காயம் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் கொகுசு கார்கள் திருட்டு... கொள்ளை கும்பல் திருச்சியில் கைது!

இந்த சூழலில் சிகிச்சைக்காக பிரசாந்த் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் அவரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதால் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரசாந்த் உண்மையிலே தப்பிக்க முயன்றபோதுதான் தலையில் அடிப்பட்டு காயம் ஏற்பட்டதா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் சொல்வது உண்மைதானா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி