ஆப்நகரம்

அரிவாளால் மாட்டை வெட்டி இளைஞர் திருச்சியில் அட்டூழியம்: கொலை வெறி மிரட்டல்!

அரிவாள் எடுத்து பசுமாட்டை வெட்டிய சமயபுரம் இளைஞரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 10 Mar 2021, 10:32 am
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள காவகார தெருவில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளியான ரமேஷ். வயது 38. இவர் வீட்டின் முன் பகுதியில் 2 பசுமாடுகளை வளர்த்து வந்துள்ளார்.
Samayam Tamil அரிவாளால் மாட்டை வெட்டி இளைஞர் திருச்சியில் அட்டூழியம்: கொலை வெறி மிரட்டல்!


அதே தெருவைச் சேர்ந்தவர் கோபி. இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். நான்காவது மகனாக ஹரிகரனுக்கு வயது 19. இந்த குடும்பத்தினர் 3 பசுமாடுகளை வீட்டில் வளர்த்து வருகின்றனர்.

இருவரும் எதிரதிரே வசித்து வருகின்றனர். வீடு என்பதால் அவ்வப்போது இருவரின் மாடுகளும் ஒன்றோடு ஒன்று அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை ரமேஷ் வீட்டில் வளர்த்து வந்த மாடுகளும் கோபி வளர்த்து வந்த மாடும் சண்டை போட்டுள்ளது. இதைக் கண்ட கோபியின் இளைய மகனான ஹரிஹரன் கோபத்தில் வீட்டிலிருந்த அருவாளை எடுத்து வந்து ரமேஷ் வளர்த்த பசுவின் கழுத்தை வெட்ட முயற்சி செய்துள்ளார்.

கோடிகளில் ரொக்கம்... கிலோக் கணக்கில் தங்கம் வெள்ளி: சமயபுரம் கோயில் உண்டியல்

இதில் அதிர்ஷ்டவசமாக மாடு சற்று தலையை நகர்த்தியதில் அதன் வலதுபக்க கொம்பு பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் வலியால் துடிதுடித்த பசுவின் அலறல் சத்தம் கேட்டு ரமேஷ் வீட்டின் வெளியே வந்த பார்த்தபோது பசு மாட்டின் கொம்பு உடைந்து ரத்தம் வழிந்தோடியது.

இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து ஹரிஹரன் ரமேஷிடம் இனி மீண்டும் உன் மாடு என் மாட்டுடன் சண்டையிட்டால் அடுத்த உன் தலையை வெட்டி விடுவேன் என மிரட்டினார் எனக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஹரிஹரன் மற்றும் அவரது சகோதரர்களை போலீசார் விசாரணைக்காகச் சமயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அடுத்த செய்தி