ஆப்நகரம்

சர்வதேச போட்டியில் தங்கம் வென்றவர்களைச் சிறப்புச் செய்த திருச்சி மக்கள்!

நேபாள நாட்டில் நடைபெற்ற சர்வதேச ஊரக இளைஞர்களுக்கான கபடி மற்றும் தடகள விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்குத் திருச்சி ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Samayam Tamil 4 May 2021, 9:07 pm
சர்வதேச ஊரக இளைஞர்களுக்கான கபடி மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்றது.
Samayam Tamil சர்வதேச போட்டியில் தங்கம் வென்றவர்களைச் சிறப்புச் செய்த திருச்சி மக்கள்!


இப்போட்டிகளில் திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த சரவணகுமார், அருன், தீபன் ராஜ் அர்ஜுன், விஜயகுமார் ஹரீஷ், வினோதினி ஆகியோர் பங்கு பெற்றுத் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

பதக்கங்களைப் பெற்றவர்கள் அனைவரும் ரயில் மூலம் திருச்சிக்கு இன்று வந்தடைந்தனர். இதையடுத்து குறிப்பிட்ட நபர்களை மாற்றம் அமைப்பு நிர்வாகியினர் வரவேற்றனர்.

திருச்சி, 20 ஃபாரீன் கைதிகளுக்கு கொரோனா உறுதி: அதிர்ச்சியில் சிறைவாசிகள்!

குறிப்பிட்ட அமைப்பின் நிர்வாகி தாமஸ், மாற்றுத்திறனாளி சகோ நிர்வாகி சிவப்பிரகாசம் உள்பட ஏராளமானோர் திருச்சி ரயில் நிலையத்தில் வைத்து நேபாள நாட்டில் தங்கப் பதக்கம் பெற்றவர்களுக்குச் சிறப்பு வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்தப் போட்டியில் பங்கேற்று திருச்சி திரும்பிய வீரர்களின் பயணச் செலவைத் திருச்சி கிழக்கு மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சிவசக்தி வழங்கியுள்ளார்.

அடுத்த செய்தி