ஆப்நகரம்

பாதுகாப்பு வீரர்களுக்காக புதிய ரக துப்பாக்கி... அசத்தும் திருச்சி படைகலன் தொழிற்சாலை!

திருச்சி திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டில் அமைந்துள்ள படைகலன் தொழிற்சாலையில் (OFT) கார்ஃபைன் என்கிற புதிய ரக துப்பாக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Jul 2021, 8:55 pm

ஹைலைட்ஸ்:

  • பாதுகாப்பு படை வீரர்களுக்காக புதிய ரக துப்பாக்கி வடிவமைப்பு.
  • இதற்கு கார்ஃபைன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • திருச்சி படைகலன் தொழிற்சாலை அசத்தல்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ஓஎஃப்டி திருச்சி
திருச்சி திருவெறும்பூர் ஓஎஃப்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய ரக துப்பாக்கி
கார்ஃபைன் ரக துப்பாக்கி அறிமுக விழாவானது இன்று படைகலன் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது. OFTயின் பொது மேலாளர் சஞ்சய் திவேதி, திருச்சி கார்பைன் துப்பாக்கியை அறிமுகப்படுத்தினார்.
இந்த புதிய ரக துப்பாக்கியானது படைக்கலன் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது. இது சிறிய மற்றும் இலகு ரக ஆயுதமாகும். போர் வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், காவல்துறை, விமான நிலையங்கள், சிறப்பு செயல்பாட்டு படை உள்ளிட்டவற்றில் பயன்படுத்துவதற்காக இந்த துப்பாக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் பொருத்தப்பட்டுள்ள (special muzzle booster)சிறப்பு முகவாய் பூஸ்டர், துப்பாக்கி சூட்டின்போது எழும் ஒளி மற்றும் சத்தத்தை குறைக்கிறது.

மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயார்... கொரோனாவுக்கே டஃப் கொடுக்கும் திமுக அமைச்சர்!

இந்த துப்பாக்கியில் அசால்ட் ரைபிளின் வெடிமருந்துகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தலாம் இதேபோல் அசால்ட் ரைபிள் மற்றும் ஏ.கே47 உதிரிபாகங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாதுகாப்பு படை வீரர்களின் கவச உடைக்குள் மறைத்து வைத்து பயன்படுத்த ஏதுவாக கார்ஃபைன் ரக துப்பாக்கி அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி