ஆப்நகரம்

திருச்சியில் கிடைத்த முதியவர் சடலம் - அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரம்

மண்ணச்சநல்லூர் அருகே 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் யார் என அடையாளம் தெரியாததால் தொடர்ந்து விசாரணை மேற்படி வருகிறது.

Curated byM.முகமது கெளஸ் | Samayam Tamil 21 May 2023, 5:57 pm

ஹைலைட்ஸ்:

  • திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் கண்டெடுப்பு
  • அவர் யார் என அடையாளம் காண்பதில் போலீசார் மும்முரம்
  • இந்த சம்பவத்தால் அப்பகுதியினர் அதிர்ச்சி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil dead body
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே முக்கியத்தில் தனியார் பேக்கரி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடைக்கு முன்பாக இன்று முதியவர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது.
அதனை கண்டு அப்பகுதி மக்கள் உடனடியாக பிச்சாண்டார் கோயில் கிராம நிர்வாக அலுவலர் ஜோதி மலருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அன்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கிடைத்த அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு கொள்ளிடம் காவல் துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் அப்பகுதி முழுவதும் ஏதாவது தடையும் கிடைக்கிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.



பின்னர் உயிரிழந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிச்சாண்டார் கோயில் கிராம நிர்வாக அலுவலர் ஜோதிமலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.

மாஜி பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் - புதுச்சேரி முதலமைச்சர் அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்பு

ஆனால் உயிரிழந்த அந்த முதியவர் யார்? என இதுவரை தெரியவில்லை. அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி உயிரிழந்தார்? என பல்வேறு கோணங்களில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
எழுத்தாளர் பற்றி
M.முகமது கெளஸ்
நான் முகமது கெளஸ். ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டமும் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் ஊடகத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. க்ரைம் சார்ந்த செய்திகள் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டும் ஆர்வம் உண்டு. தற்போது டிஜிட்டல் ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி