ஆப்நகரம்

வீட்டை கேட்கும் பாஜக பிரமுகர்; கலெக்டர் ஆபீசில் மூதாட்டி மனு!

பாரதிய ஜனதா கட்சியின் மண்டல தலைவர் தனது வீட்டை எழுதி தர சொல்லி கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மூதாட்டி மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 14 Sep 2021, 8:31 am
திருச்சி மாவட்டம் பிராட்டியூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்கொடி (61). இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள்.
Samayam Tamil பாஜக பிரமுகர் மீது புகார் அளித்த மூதாட்டி
பாஜக பிரமுகர் மீது புகார் அளித்த மூதாட்டி


இருவரும் திருமணம் முடிந்து குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதில் ஜெயக்கொடியான மூதாட்டி பிராட்டியூர் பகுதியில் தனியாக வசித்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு தோகமலையை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் கன்டோன்மென்ட் பகுதி மண்டல தலைவர் பரமசிவம் என்பவருக்கு தனது வீட்டின் அருகில் இருந்த காலி மனையை விற்பனை செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பரமசிவம் மூதாட்டி ஜெயக்கொடி இடம் அவர் இருக்கும் வீட்டை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி கேட்டு தொடர்ந்து கொலை மிரட்டல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்துள்ளார். புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரிலும் இதுவரை போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.

திமுக முடிவால் இந்தியாவுக்கு ஆபத்து... எச்சரிக்கும் பாஜக!

அப்போது திடீரென மூதாட்டி தான் கொண்டு வந்திருந்த மனு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை சாலையில் தூக்கி எறிந்து கதறி அழுதபடியே கலெக்டர் அலுவலகம் முன்பு மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவருக்கு முதலுதவி செய்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அழைத்துச் சென்றனர்.

அடுத்த செய்தி