ஆப்நகரம்

திருச்சி கல்லூரியில் வைத்து ஒருதலை காதல் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை, 5 லட்சம் அபராதம்!

திருச்சி மாவட்டத்தில் கல்லுாரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

Samayam Tamil 21 Oct 2021, 11:42 pm
திருச்சி தென்னுார் புதுமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர் புதிய தமிழகம் கட்சியின் மாநில பொறுப்பாளராக உள்ளார். இவரது மகள் மலர்விழி மீரா. வயது 19. விமான நிலையம் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் தகவல் தொழில்நுட்பம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
Samayam Tamil திருச்சி கல்லூரியில் வைத்து ஒருதலை காதல் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை, 5 லட்சம் அபராதம்!


இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் பாலமுரளி கார்த்திக். வயது 34. இவர் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த சூழலில் மலர்விழி மீராவை ஒரு தலையாக காதலித்து வந்து உள்ளார். இவர் தனது காதலை மீராவிடம் கூறியுள்ளார். ஆனால் தூரத்து உறவுமுறையில் மீராவுக்கு கார்த்திக் சகோதரர் எனக் கூறப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட காரணத்தை கூறி மீரா கார்த்திக்கை தவிர்த்து வந்ததாக சொல்லப்பட்டு உள்ளது.

இந்த காரணத்தை ஏற்காத பாலமுரளி கார்த்திக், கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அன்று மீரா படிக்கும் கல்லுாரிக்கு சென்றுள்ளார். அங்கு மீராவை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த தாக்குதலில் சிக்கி மலர்விழி மீரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருச்சியில் “லாக் டவுன்” ஓபனிங், 50 பைசாவுக்கு டி-சர்ட்: கொந்தளித்த போலீஸ்!
இது குறித்து தில்லை நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு திருச்சி மாவட்ட கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் எண் 3 இல் விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி தங்கவேலு இன்று வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட பாலமுரளி கார்த்தி மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டது. அதேபோல் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். மேலும், இந்த தொகையானது இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடாக வழங்கிடவும் அவர் உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி