ஆப்நகரம்

கொத்தாய் இறந்து கிடந்த மயில்கள்... விஷம் வைக்கப்பட்டதா என்று விசாரணை

திருச்சி மணப்பாறை அருகே 6 மயில்கள் உயிரிழந்த கொடூர சம்பவம் குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 16 Dec 2020, 3:51 pm
திருச்சி மாவட்டம். மணப்பாறை அருகே மேலமஞ்சம்பட்டி குளத்தின் கரையில் நேற்று மயில்கள் இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்று வனத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
Samayam Tamil திருச்சி மணப்பாறை
மயில்கள் மரணம் - திருச்சி மணப்பாறை


அப்போது அங்கு ஐந்து மயில்கள் குவியலாக உயிரிழந்து கிடந்துள்ளது. மேலும் உயிருக்கு போராடி கொண்டிருந்த மற்றொரு மயில் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தது. பின்னர் இறந்த மயில்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்து வனப்பபகுதியில் புதைத்தனர்.

அருகிலுள்ள தோட்டங்களில் எலிகளை கொல்ல வைக்கப்பட்ட விஷத்தை மயில்கள் சாப்பிட்டதா அல்லது வேறு எதுவும் காரணமா என வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர்.

முட்புதரில் கண்டெடுத்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த இளம்பெண்... பொதுமக்கள் நெகிழ்ச்சி!

ஒரே சமயத்தில் ஆறு மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி