ஆப்நகரம்

அன்பில் மகேஷ் தொகுதியில் கருப்பு கொடி ஏற்றிய மக்கள்: குடியரசு தின விழா புறக்கணிப்பு!

திருச்சியில் குடியரசு தின விழாவை புறக்கணித்த அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதி மக்கள் கருப்புக் கொடி ஏற்றினர்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 26 Jan 2023, 12:59 pm
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்த மாவடிகுளம் அருகில் வார்டு எண் 45 காருண்யா நகரில் அடிப்படை வசதி , மற்றும் பாதாள சாக்கடை செய்து கொடுக்காமல் 5 வருடமாக இழுத்தடிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் குடியரசு தினத்தை புறக்கனித்தனர்.
Samayam Tamil black flag


காருண்யா நகரில் 45 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நீண்டகாலமாக பாதாள சாக்கடை பணிசெய்து தராததால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் அப்பகுதியில் சாலை வசதிகளும் பலமுறை முறையிட்டும் ஏற்படுத்தி கொடுக்கவில்லை . அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டிற்கு 5000 ரூபாய் என வசூல் செய்து இரண்டு லட்சம் ரூபாய் செலவில் அவர்களே சாலை அமைத்துகொண்டனர். ஆனால் அதை மாநகராட்சி செய்ததாத கூறி அவர்கள் அந்த பணத்தை கையாடல் செய்துவிட்டதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

அப்பகுதியில் பாதாளச் சாக்கடை இல்லாததால் ஒவ்வெரு விட்டில் உள்ள கழிவு நீரை அருகில் உள்ள காலி மனையில் விடுவதால் அங்கு தண்ணீர் தேங்கி டெங்கு, மலேரியா, தொடர் காய்ச்சல் போன்ற நோய்கள் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் பாதிப்புக்குள்ளகியுள்ளனர்.
குடியரசு தின விழா: வாழ்க தமிழ்நாடு.. வாழ்க பாரதம் - ஆர்.என்.ரவி பேசியது என்ன?
தமிழ்நாடு அரசு இது போல் சுகாதார சீர்கேடு நடக்காமல் தடுக்க பல திட்டங்கள் கொண்டுவந்தும் இந்த பகுதி மக்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.

திமுக அரசு செயல்ப்படுத்தும் திட்டத்தை இங்கு உள்ள மாநகராட்சி நிர்வாகம் செய்யாமல் மெத்தனம் காட்டி வருகின்றார்கள். அவர்களை கண்டித்து அப்பகுதி மக்கள் 74-வது குடியரசு தினத்தை அப்பகுதி மக்கள் கருப்புக்கொடி தங்களுடைய வீடடின் முன் பகுதியை ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இவர்கள் மேல் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க சொல்லி அப்பகுதி மக்கள் கோசங்கள் எழுப்பியும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த பகுதியில் போலியான வரைபடம் தயாரித்து அனுமதி அளித்தும், வீடுகளும் கட்டப்பட்டு , வரி வசூல் வேட்டையும் நடைபெற்று வருகிறது.
உயர் நீதிமன்றத்தில் குடியரசு தின விழா: தேசிய கொடி ஏற்றிய தலைமை நீதிபதி டி.ராஜா
அப்பகுதியில் 2019 ஆண்டு 9.5 லட்சம் ரூபாய் செலவில் இல்லாத பகுதிக்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டதாகவும் மோசடி நடந்துள்ளது.

இத்திட்டத்தை 2019 ஆண்டு அன்பில் மகேஷ் பெய்யாமொழி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் தொடங்கி வைத்ததாக கூறப்படுகிறது. கல்வெட்டு மட்டுமே உள்ளதாக அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அன்பின் மகேஷ் பொய்யாமொழி தற்போது அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில் அப்பகுதி பொது மக்கள் குடியரசு தினத்தை புறக்கணித்து கருப்பு கொடி ஏற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி