திருச்சி அருகே தெற்கு காட்டூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. போட்டி நடைபெறும் இடத்திற்கு உரிமையாளரிடம் முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை நடைபெறும் பகுதிக்கு சொந்தமான பாப்பா குறிச்சி, கீதாபுரம், காந்திபுரம், வீதி வடங்கம், மஞ்சத்திடல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு ஜல்லிக்கட்டு குழுவினர் டோக்கன் வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.
உள்ளூர் மக்கள் எதிர்ப்பு இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் காளைகள் வரக்கூடாது என வெளியூரில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வரும் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. இதனையடுத்து சமரசம் பேச சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். பேச்சுவார்த்தை ஒருபுறம் நடைபெற்ற நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிரடியாக ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதியை முற்றுகையிட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை உடனடியாக நிறுத்துமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் தடியடி
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் காவல் உதவி கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைந்துபோக செய்தனர். திடீரென தடியடி நடத்தப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
உள்ளூர் மக்கள் எதிர்ப்பு
போலீசார் தடியடி
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் காவல் உதவி கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைந்துபோக செய்தனர். திடீரென தடியடி நடத்தப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.