ஆப்நகரம்

இந்த விஷயத்தில் இந்தியாவுக்கே முன்னுதாரணமாகும் திருவெறும்பூர் காவல் நிலையம்!

இந்தியாவிலேயே முதல் முறையாக, திருச்சி சரக காவல் நிலையங்களில் குழந்தைகளின் வசதிக்காக 'போலீஸ் கார்னர்' எனப்படும் பிரத்யேக காத்திருப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Nov 2020, 8:32 pm
புகார் அளிப்பதற்கோ, போலீசாரின் உதவியை நாடியோ காவல் நிலையத்துக்கு வரும் பெண்கள், தங்களோடு அழைத்துவரும் அவர்களின் பிள்ளைகளுக்காக, திருச்சி திருவெறும்பூரில் உள்ள சட்டம் - ஒழுங்கு காவல் நிலைய வளாகத்தில் 'போலீஸ் கார்னர்' எனப்படும் பிரத்யேக காத்திருப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil போலீஸ் கார்னர் -திருச்சி
திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையம்


திருச்சி திருவெறும்பூரில் நடைபெற்ற போலீஸ் கார்னர் நிகழ்ச்சியில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி ஆனந்த் கலந்து கொண்டு திருச்சி சரகத்தில் குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 11 போலீஸ் கார்னர்களை திறந்து வைத்தார்.

இந்த விழாவில், காவல் துறை உயரதிகாரிகள் ஹெச்.எம். ஜெயராம் ஐபிஸ், அன்னி விஜயா, பி. மோகன் உள்ளிட்டோர பங்கேற்றனர்.

சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் திருச்சியில் விரதத்தை முடிக்க திட்டம்!

சிறப்பாக பணியாற்றிய காவலர்களை ஊக்குவிக்கும் விதத்தில் CWPPoliceMotivation பரிசும், இருபது குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இந்தியாவில்இதுபோன்ற POLICE CORENER துவங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

திருச்சி சரக காவல் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ள போலீஸ் கார்னர்கள் தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களிலும் துவங்கப்பட வாய்ப்புள்ளதாக விழாவில் பங்கேற்ற சிறப்பு லிருந்தினர்கள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி