ஆப்நகரம்

போலீஸ் குடும்பத்திற்கே பாதுகாப்பு இல்ல: திருச்சி சம்பவத்தால் மக்கள் பீதி!

திருச்சி அருகே பெண் தலைமைக் காவலர் வீட்டில் 19 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Feb 2021, 8:12 am
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவலர் துளசி ராமன். இவரது மனைவி ரமணி. இவர் திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
Samayam Tamil போலீஸ் குடும்பத்திற்கே பாதுகாப்பு இல்ல: திருச்சி சம்பவத்தால் மக்கள் பீதி!


பணி காரணமாக இருவரும் காலை வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டு மீண்டும் மாலை வீட்டிற்கு வருவார்கள். அதேபோல் வெள்ளிக்கிழமை பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.

அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸ் தம்பதி உடனடியாக வீட்டினுள் சென்று படுக்கையறையிலிருந்த பீரோவைச் சரிபார்த்தனர். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த 19 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த திருட்டு குறித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் போலீஸ் தம்பதி புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

சசிகலாவுக்காக வேண்டுதல்... 501 தேங்காய் உடைத்த ஆதரவாளர்

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கதவு பீரோ உள்ளிட்ட இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளைக் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குண்டூர் பகுதியில் உள்ள பெண் தலைமைக் காவலர் வீட்டிலேயே நகை கொள்ளை போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் தம்பதி வீட்டில் நடந்துள்ள திருட்டு காரணமாக மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அடுத்த செய்தி