ஆப்நகரம்

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை… நடுரோட்டில் திமுக கொடி, பொதுமக்கள் காட்டம்!

சாலையில் வைக்கப்பட்ட திமுக கொடி கம்பங்களால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளானதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

Samayam Tamil 20 Dec 2021, 7:14 pm
திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை முன்னிட்டு சாலையில் நடப்பட்ட கொடி கம்பங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லையே என்று பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
Samayam Tamil சாலையின் மீது வைக்கப்பட்டுள்ள கட்சி கொடி


அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் என்றாலே பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்கள் நடுவது வழக்கமான ஒரு நிகழ்வாகவே இன்றளவிலும் இருந்து வருகிறது.
ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டுமென்று பல அரசியல் கட்சிகள் முரசு கொட்டினாலும் கூட, இன்றளவிலும் பானர்கள் வைப்பது, கொடி கம்பங்களை நடுவது போன்ற வழக்கத்தை கைவிடுவதாக இல்லை.

உச்சம் தொட்ட உரம் விலை; உழவு செய்ய யோசிக்கும் விவசாயிகள்... டெல்டாவில் அவலநிலை!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுக்களை பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பொதுவாக இது போன்ற நிகழ்ச்சி என்றால் கொடி கம்பங்கள் சாலையின் ஓரத்தில் நடப்பட்டு இருக்கும், ஆனால் இன்று ஏறத்தாள சாலையின் நடுவில் நடப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற செயலை அறவே அரசியல் கட்சிகள் தவிர்த்து கொண்டால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி