ஆப்நகரம்

அரியாற்றில் மீண்டும் உடைப்பு... நடவடிக்கை எடுக்குமா பொதுப்பணித் துறை?

மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நீர் வர்த்து அதிகரித்துள்ளதால் திருச்சி அரியாற்றில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 7 Dec 2021, 7:57 pm
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை பரவலாக கன மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருச்சி மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
Samayam Tamil அரியாற்றில் வெள்ளப்பெருக்கு
திருச்சி மணப்பாறை அருகே அரியாற்றில் கரைப்புரண்டோடும் வெள்ளம்


ஏற்கனவே மணப்பாறையில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி வழிந்தோடி வரும் நிலையில், இந்த கனமழையின் காரணமாக பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்ததுள்ளது.

கடந்த வாரம் இதேபோல் அரியாற்றில் உடைப்பு ஏற்பட்டபோது அதை பொதுபணித்துறை அதிகாரிகள், மணல் மூட்டைகளைக்கொண்டு தற்காலிகமாக சரி செய்தனர்.

ஷாக் அடித்து நின்ற சுவாசம், ஷாக் கொடுத்து சிறுமியை மீட்ட அதிசயம்: திருச்சி அரசு மருத்துவர்கள் சூப்பர்!
தற்போது அங்கு மீண்டும் கனமழை பெய்துவருவதன் காரணமாக மணப்பாறையில் இருந்து வரும் அதிகப்படியான நீர் திருச்சி அரியாற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்துள்ளது.

இதனால் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு மேலும் தடுப்புகள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு, கருமண்டபம் மற்றும் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

திக்கு முக்காடும் திருச்சி: டிச., 12க்கு காத்திருக்கும் அன்பில் கோஷ்டி!
இதன் காரணமாக தீரன் நகர்,கருமண்டபம், பிராட்டியூர், உறையூரை அடுத்த செல்வாநகர், ராஜலட்சுமி நகர்,அறவானூர்,மருதண்டாகுறிச்சி போன்ற பல்வேறு இடங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது.

அடுத்த செய்தி