ஆப்நகரம்

தமிழக அரசு புதிய உத்தரவு; வருவாய் ஊழியர்கள் அதிர்ச்சி!

தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய உத்தரவால் வருவாய்த்துறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். உடனடியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில், தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 26 Sep 2021, 6:27 pm

ஹைலைட்ஸ்:

  • தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு
  • வருவாய்த்துறை ஊழியர்கள் பீதி
  • முதல்வர் தலையிடக் கோரிக்கை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil வருவாய் ஊழியர்கள் பேட்டி
வருவாய் ஊழியர்கள் பேட்டி
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் திருச்சியில் பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு சங்க பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கிராம உதவியாளர்களுக்கு பிடிக்கப்பட்டு வந்த பங்களிப்பு ஓய்வூதியம் என்பது இம்மாதம் முதல் பிடிக்க கூடாது என ஒரு அரசு உத்தரவு வந்துள்ளது. அந்த உத்தரவை நீக்குகின்ற வகையில் தமிழக முதல்வருக்கு எங்களது கோரிக்கை இருக்கும்.

தமிழகத்தில் வருவாய் துறையில் பணியாற்றி கொண்டிருக்கிற 12,000 கிராம உதவியாளருக்கும் அரசுக்கும் மக்களுக்கும் இருக்கின்ற தொடர்பை துண்டிக்கும் வகையில் இந்த திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள்.

புதிய ஓய்வூதிய பங்களிப்பு திட்டத்தை ரத்து செய்து பழைய புதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இந்நிலையில் இந்த
அரசாணை கிராம உதவியாளர் மத்தியிலே ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருவாய்த்துறை அமைச்சர் கடந்த 1ம் தேதி சட்டமன்றத்தில் பேசும்பொழுது கிராம உதவியாளர்களின் கோரிக்கையை நன்கு உணர்ந்திருந்தார்கள். தற்போது இந்த அரசு ஆணை என்பது வருவாய்த்துறை அமைச்சருக்கும், முதலமைச்சருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என கருத்து நிலவுகிறது.

காவல் துறையிலும் சாதி பாகுபாடு; திருமாவளவன் திடுக் குற்றச்சாட்டு!

வரும் 10ஆம் தேதிக்குள் வருவாய்த்துறை அமைச்சர் மூலமாக முதல்வர் கவனத்திற்கு எடுத்துச்சென்று பழையபடி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.

பள்ளி மாணவர்கள் குஷி; அமைச்சர் சூப்பர் தகவல்!

இந்த கோரிக்கையை தமிழக முதல்வருக்கு இதன் மூலம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். இவ்வாறு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி