ஆப்நகரம்

தேசிய அளவில் வலுதூக்கும் போட்டியில் திருச்சிக்காரர்தான் முதல் இடம்!

திருச்சி மாவட்டத்தில் இந்திய அளவில் வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற கல்லூரி மாணவனுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது.

Samayam Tamil 5 Dec 2021, 11:03 pm
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடி ஊராட்சியில் உள்ள பள்ளிவிடை கிராமத்தில் வசிக்கும் கல்லூரி மாணவர் தேசிய அளவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் முதலிடம் பெற்று தங்கம் வென்ற கல்லூரி மாணவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
Samayam Tamil தேசிய  அளவில் வலுதூக்கும் போட்டியில் திருச்சிக்காரர்தான் முதல் இடம்!


சமயபுரம் அருகே பள்ளிவிடை கிராமத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் ஈஸ்வரி தம்பதியின் மகன் ராஜசேகரன். வயது 19. இவர் பள்ளிவிடை கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ தனியார் பள்ளியில் கல்வி பயின்று, தற்போது திருச்சி திருவானைக்காவலில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ தமிழ் இலக்கியம் பயின்று வருகிறார் மாணவர் ராஜசேகரன்.

சமயபுரத்தில் உள்ள எக்ஸ்மேன் பிட்னஸ் பயிற்சி சென்டரில் கடந்த 2 வருடமாக பயிற்சி பெற்று வரும் ராஜசேகரன், மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசுகளை வென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 19ஆம் தேதி ஹைதராபாத்தில் தேசிய அளவில் நடைபெற்ற 53 கிலோ எடையுள்ள ஜூனியர் பிரிவில் வலு தூக்கும் போட்டியில் பங்கேற்று முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். இந்த வலுதூக்கும் போட்டியில் மொத்தம் 937 பேர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாட்டிலிருந்து 32 பேர் பங்கேற்ற நிலையில் ராஜசேகர் 53 கிலோ எடையுள்ள ஜூனியர் பிரிவில் 395 கிலோ எடையினை தூக்கி முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

ரெங்கா ரெங்கா எனப் பக்தர்கள் கோஷம்: ஸ்ரீரங்க ஏகாதசி திருவிழா உற்சாகம்!
தங்க பதக்கம் வென்ற மாணவனுக்கு பாராட்டு விழா இவர் படித்த பள்ளிவிடை கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.

இந்த பாராட்டு விழாவில் மார்க்சிஸ்ட் கம்னிஸ்யூஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ஜெயசீலன், ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், பள்ளித் தலைமையாசிரியர், கிராம மக்கள், ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று நினைவு பரிசு வழங்கி பாராட்டி வாழ்த்தினர்.

அடுத்த செய்தி