ஆப்நகரம்

சசிகலாவுக்காக வேண்டுதல்... 501 தேங்காய் உடைத்த ஆதரவாளர்

திருச்சியில் 501 தேங்காய் உடைத்து வேண்டுதல் நிறைவேற்றிய சசிகலா ஆதரவாளர்

Samayam Tamil 26 Feb 2021, 5:42 pm

ஹைலைட்ஸ்:

  • சசிகலா கொரோனாவிலிருந்து மீண்டால் 501 தேங்காய்கள் உடைப்பதாக வேண்டுதல்
  • கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து நிறைவேற்றம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil sasikala supporter pooja.

சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 4வருடங்களுக்கு முன் சசிகலா கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில்
அடைக்கப்பட்டார். 4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து சசிகலா விடுதலை ஆவதற்கு சில நாட்கள் முன் திடீரென கொரோனா தொற்றால் உடல்நிலை குறைவு ஏற்பட்டு பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
அப்போது சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலை ஆகி வர வேண்டும் என திருச்சியை சேர்ந்த
மாவட்ட சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளருமான ஒத்தக்கடை செந்தில் வேண்டுதல் செய்திருந்தார்.

இந்நிலையில் தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக திருச்சி ஒத்தக்கடை பகுதியிலுள்ள முத்துமாரியம்மன் திருக்கோவில், கண்டேன்மென்ட் பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோயில் , மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விநாயகர் கோயில் , கான்வென்ட் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் , ஆர்.சி . பள்ளிக்கு எதிரில் உள்ள வழிவிடு வீர முனீஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்து சிறப்பு பூஜைகள் மற்றும் 501தேங்காய்களை ஒத்தக்கடை செந்தில்.அசோகன், பீமநகர் காசிம், ஆட்டோ செந்தில்,
பீமநகர் விஜி உட்பட கட்சியினர் ஆகியோர் உடைத்து வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள்..

அடுத்த செய்தி