ஆப்நகரம்

சசிகலாவுக்காக வெக்காளியம்மன் பக்தர்களாக மாறி ஆதரவாளர்கள்!

சசிகலா போட்டோவை கையில் வைத்து காளியம்மன் கோயிலுக்குச் சென்று மனம் உருகி பிரார்த்தனை செய்த அவரது ஆதரவாளர்கள்.

Samayam Tamil 23 Jan 2021, 9:07 am
சசிகலா நலம் பெற வேண்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள வெக்காளியம்மன் கோயிலில் சிறப்புப் பூசை நேற்று நடைபெற்றது. பூரண உடல் நலத்துடன் அவர் விரைவில் அவர் சிறையை விட்டு பத்திரமாக வெளிவர வேண்டும் எனச் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
Samayam Tamil சசிகலா-ஜெயலலிதா போட்டோவோடு காளியம்மன் கோயிலுக்குப் படையெடுத்த ஆதரவாளர்கள்!
சசிகலா-ஜெயலலிதா போட்டோவோடு காளியம்மன் கோயிலுக்குப் படையெடுத்த ஆதரவாளர்கள்!


பெங்களூர் சிறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா பூரண நலம் பெற்றுக் குறிப்பிட்ட தேதியில் விடுதலையாக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பிரார்த்தனையை முன்னெடுத்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாகத் திருச்சி சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவர் ஒத்தக்கடை செந்தில் தலைமையில் உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் சிறப்புப் பூசை நடைபெற்றது.

எடப்பாடி முதல்வரானது இறைவனாலா, சசிகலாவாலா? -திமுக தயாநிதி கேள்வி!

இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் உமா மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து சசிகலா பூரண குணமடைந்து, வெளியே வரவேண்டும் என வெக்காளியம்மனை மனம் உருகி வேண்டிக் கொண்டனர். இந்த வழிப்பாட்டின்போது சசிகலாவின் உருவப் படத்தை கையில் ஏந்தியபடி அவர்கள் வழிப்பட்டனர்.

அடுத்த செய்தி