ஆப்நகரம்

பலத்த மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு: திருச்சி நிலை இது!

வெளுத்து வாங்கும் கன மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவு பிறபித்து உள்ளார்.

Samayam Tamil 29 Oct 2021, 4:05 pm
திருச்சி மாவட்டத்தில் இரவு முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
Samayam Tamil பலத்த மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு: திருச்சி நிலை இது!


தென் மேற்கு வங்ககடலின் மத்திய பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக திருச்சி மாவட்டத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதன்படி மாநகரில் விமான நிலையம் உறையூர், சத்திரம் பேருந்து நிலையம், கண்டன்மெண்ட், பாலக்கரை, கிராப்பட்டி ,உள்ளிட்ட பகுதிகளிலும் இதேபோல் புறநகர் பகுதிகளான திருவெரும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், மற்றும் மணப்பாறை உள்ளிட்ட பல இடங்களிலும் மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது.

ஜெஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவருக்கு முக ஸ்டாலின் சொன்ன சப்ரைஸ்!
இதன் காரணமாக மலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளும், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களும் பெரும் சிரமம் ஏற்ப்பட்டு உள்ளது.

மேலும் மழை முன் எச்சரிக்கை காரணமாக திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்கள் தகவல் தெரிவித்து உள்ளார்.

அடுத்த செய்தி