ஆப்நகரம்

கொடுத்த கடனை திருப்பி கேட்டது ஒரு தப்பா? - சாஃப்ட்வேர் இன்ஜினியர் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

கடனாக கொடுத்த 15 லட்சம் ரூபாயை திருப்பி கேட்ட தம்பியின் மனைவியை வாலிபர் கொலை செய்த சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Jan 2021, 5:16 pm
திருவாரூர் ஈவிஎஸ் நகரை சேர்ந்த சுந்தரமூர்த்தி - சொர்ண பிரியா தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மென்பொருள் நிறுவன பணியாளர்களான இருவரும் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்து வந்துள்ளனர்.
Samayam Tamil பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர் கொலை
திருவாரூரில் பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர் கொலை


சுந்தரமூர்த்தியின் அண்ணனான ராஜகோபாலின் குடும்பமும், இவரது குடும்பமும் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்து வருகின்றனர். ராஜகோபால் திருவாரூரை அடுத்த திருக்கண்ணமங்கையில் தனியார் பள்ளியை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ராஜகோபால் அவரது தம்பி சுந்தரமூர்த்தியின் மனைவி சொர்ணபிரியாவுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கத்தியால் குத்தி உள்ளார். கழுத்தில் ரத்தம் வழிய உயிருக்கு ஆபத்தான நிலையில் சொர்ண பிரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நிரம்பி வலியும் திருச்சி அன்புச்சுவர்... தேவைக்கேற்ப அனைவருக்கு ஆடைகள்!
ஆனால் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதால் அவரின் பெற்றோர், உற்றார், உறவினர்கள் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர்.

இதனிடையே, ராஜகோபால் திருவாரூர் நகர போலீசில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், " சொர்ண ப்ரியாவிடம் 15 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியிருந்தேன்.

தேர்தல் பரப்புரையை பாதியிலேயே நிறுத்திய முதல்வர்... காரணம் தெரிஞ்சா அசந்திடுவீங்க!

தற்போது அந்த பணத்தை திரும்பத் தருமாறு கேட்டு தினமும் ஆபாசமாக திட்டி வந்தார். அதனால் ஆத்திரமடைந்து அவரை கத்தியால் குத்தினேன்" என்று ராஜகோபால் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து ராஜகோபாலை கைது போலீசார் சிறையில் அடைத்தனர். கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட தம்பியின் மனைவியை வாலிபர் கொலை செய்த சம்பவம் திருவாரூர் குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி