ஆப்நகரம்

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் மண்டையை உடைத்து, தாலி செயின் உள்ளிட்டவை கொள்ளை!

நள்ளிரவில் வீடு புகுந்து, பெண் ஒருவரை அடித்து மண்டையை உடைத்து, அவரது தாலிச் செயின் உள்ளிட்டவற்றை பறித்து சென்ற கொள்ளையர்களின் செயல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 19 Jan 2021, 1:21 pm
திருச்சி மேலூர் ரோடு லக்ஷ்மி நாராயண நகர் 2ஆவது தெருவில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற ஏர்போர்ட் அதிகாரி சுவாமிநாதன்(85). இவரது மனைவி பாப்பா(80) இவர்களது மகள் அரசுப் பள்ளி ஆசிரியர் சுகந்தி(55). கணவர் ஜெயமணி இறந்து விட்டார்‌. இவர்களது மகன் சீனிவாசன். இவருக்கு சிந்துஜா என்ற மனைவியும் 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
Samayam Tamil தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் மண்டையை உடைத்து, தாலி செயின் உள்ளிட்டவை கொள்ளை!
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் மண்டையை உடைத்து, தாலி செயின் உள்ளிட்டவை கொள்ளை!


இவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாகக் குறிப்பிட்ட முகவரியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் வேலை காரணமாகச் சீனிவாசன் மட்டும் சென்னை சென்று விட்டார். வீட்டில் வயதான சுவாமிநாதன் அவரது மனைவி பாப்பா மகள் சுகந்தி மருமகள் சிந்துஜா மற்றும் அவரது மகள் ஷானவி ஆகிய 5 பேர் மட்டும் வீட்டு தனித்தனி அறையில் படுத்துத் தூங்கியுள்ளனர்.

இந்த சூழலில் நேற்றிரவு 2.30 மணி அளவில் முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் வீட்டின் கொல்லைப் புற கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து தூங்கிக்கொண்டிருந்த சிந்துஜாவின் தலையில் தாக்கி உள்ளனர்.

சுஜித்தைப் போல் மற்றொரு சோகம், திருச்சியில்தான் இதுவும்!

தொடர்ந்து அந்த கொள்ளையர்கள் சிந்துஜாவின் தாலிச் செயின், மாமியார் சுகந்தியின் வளையல், மோதிரம், தோடு உள்ளிட்ட 20 பவுன் நகை மற்றும் 13, 500 பணத்தைத் திருடிவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீஸ் துனை கமிஷனர் வேதரத்தினம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடி கேமராக்களை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி