ஆப்நகரம்

கார்த்திகை தீபம்... களைக்கட்டும் ஸ்ரீரங்கம்!

கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, ஸ்ரீரங்கம் கோயிலில் சொக்கப்பானை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதன் அடையாளமாக, கோயில் வளாகத்தில் இன்று பந்தக்கால் நடப்பட்டது.

Samayam Tamil 21 Nov 2020, 8:51 pm
கார்த்திகை தீபத் திருநாள் வரும் 30 ஆம் தேதி (நவம்பர் 30) கொண்டாடப்படவுள்ளது. இந்த நிகழ்வின்போது திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் அருகே சொக்கப்பானை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும்.
Samayam Tamil திருச்சி -ஸ்ரீரங்கம்
திருச்சி -ஸ்ரீரங்கம் -கார்த்திகை கீபம்


அப்போது நம் பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி கண்டருளுவார். இந்த வைபவத்தையொட்டி, 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் மஞ்சள், சந்தனம் , மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அணிவிக்கப்பட்டு, கோயில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல புனித நீர் தெளிக்கப்பட்டு முகூர்த்த கால் கோயில் ஊழியர்களால் இன்று நடப்பட்டது .

கோயில் இனண ஆணையர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்!

இந்நிகழ்ச்சியில் கோயில் யானைகள் லெட்சுமி, ஆண்டாள் ஆகியவை தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தியது பக்கர்களை பரவசப்படுத்தியது. இந்த பந்தக் காலை சுற்றி சுமார் 5 அடி அகலத்துக்கும், 20 அடி உயரத்துக்கும் சொக்கப்பானை அமைக்கும் பணி நடைபெற உள்ளது

அடுத்த செய்தி