நாக்கில் அலகு குத்திய சசிகலா ஆதரவாளர்... திருச்சியில் பரபரப்பு!
சசிகலா பூரண நலம் பெற வேண்டி, வழிவிடு முருகன் கோவிலில் நாக்கில் அலகு குத்தி வழிபாடு நடத்த அவரது ஆதரவாளருக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil 23 Jan 2021, 1:34 pm
சசிகலா பூரண உடல் நலத்துடன் குறிப்பிட்ட தேதியில் விடுதலையாக வேண்டி, திருச்சியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும், சசிகலா பேரவைத் தலைவருமான ஒத்தக்கடை செந்தில், திருச்சி ரயில்வே சந்திப்பு எதிரில் உள்ள வழிவிடு வேல்முருகன் கோயிலில், நாக்கில் அலகு குத்தி மவுன விரதம் மேற்கொண்டார்.
அப்போது உரிய அனுமதி பெறாமல் கூட்டம் கூட்டியதாக கூறி போலீசார், ஒத்தக்கடை செந்திலை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர்.
அத்துடன் செந்தில் நாக்கில் குத்தி இருந்த அலகினையும் போலீசார் வலுகட்டாயமாக அகற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சசிகலாவுக்காக வெக்காளியம்மன் பக்தர்களாக மாறி ஆதரவாளர்கள்!
முன்னதாக,. சசிகலா உடல்நலம் பெற அவரத ஆதரவாளர்கள் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது உரிய அனுமதி பெறாமல் கூட்டம் கூட்டியதாக கூறி போலீசார், ஒத்தக்கடை செந்திலை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர்.
அத்துடன் செந்தில் நாக்கில் குத்தி இருந்த அலகினையும் போலீசார் வலுகட்டாயமாக அகற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சசிகலாவுக்காக வெக்காளியம்மன் பக்தர்களாக மாறி ஆதரவாளர்கள்!
முன்னதாக,. சசிகலா உடல்நலம் பெற அவரத ஆதரவாளர்கள் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.