ஆப்நகரம்

என்னை சந்தித்தவர்கள் ஜாக்கிரதை; அமைச்சர் அதிரடி தகவல்!

என்னை சந்தித்து சென்றவர்கள் ஜாக்கிரதையாக இருக்கனும் என்று, தமிழக அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Samayam Tamil 19 Jan 2022, 12:21 pm
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்



அதன்பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தியது. இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

ராஜேந்திர பாலாஜி புது ரூட்டு; இனி தான்.. ஆட்டமே ஆரம்பம்!

இதனால் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கடைகள், ஓட்டல்கள், சினிமா திரையங்கு 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிமுறைகள் உடனடியாக வந்ததை அடுத்து தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறதா? என அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

இன்னும் 4 வருஷம் நான் தான் எம்.எல்.ஏ; அதிகாரிகளை தெறிக்க விட்ட ஈஸ்வரன்!

ஆனாலும் தற்போது வீசும் கொரோனா 3வது அலையால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் சமீபத்தில் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பாரதியாரை தெரியாதா?; பாஜவை சுளுக்கெடுக்கும் முத்தரசன்!

இதையடுத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அரியலூரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறி இருப்பதாவது:

உடல் சோர்வு, சளி, காய்ச்சலை தொடர்ந்து, கடும் தொண்டை வலி ஏற்பட்டதால் பரிசோதனை செய்து கொண்டேன். இதில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நந்தவனத்தில் ராஜகோபால சுவாமி.. ஆண்டாள் கோலத்தில் தரிசனம்!

இதனால் சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதனால் அமைச்சர் சிவசங்கரை சந்தித்து சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஆண்டு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்து இருந்தார். இந்நிலையில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு மீண்டும் 2வது முறை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

அடுத்த செய்தி