தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் சுதாகரன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.
இதில் மாநில பொருளாளர் கதிரவன், மாநில துணைத் தலைவர் நீலகண்டன், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப் பொதுச் செயலாளர் ரங்கராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மருத்துவ படிப்பில் 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 2.5 சதவீதம் இடஒதுக்கீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேல் யாத்திரை விவகாரம்... வீதிக்கு வந்த பாஜக தொண்டர்கள்!
மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆசிரியர் பணியிடங்களுக்கு வயது வரம்பின்றி பணி ஆணை வழங்கிட வேண்டும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு போராட்ட காலத்திற்கான ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில பொருளாளர் கதிரவன், மாநில துணைத் தலைவர் நீலகண்டன், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப் பொதுச் செயலாளர் ரங்கராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மருத்துவ படிப்பில் 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 2.5 சதவீதம் இடஒதுக்கீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேல் யாத்திரை விவகாரம்... வீதிக்கு வந்த பாஜக தொண்டர்கள்!
மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆசிரியர் பணியிடங்களுக்கு வயது வரம்பின்றி பணி ஆணை வழங்கிட வேண்டும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு போராட்ட காலத்திற்கான ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.