ஆப்நகரம்

கேரளா ஆசாமி ‘திருதிரு’; சுங்கத்துறை ‘விறுவிறு’

துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வந்த நபர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார்.

Samayam Tamil 18 Apr 2021, 11:18 am
துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் திருச்சிக்கு நேற்று மாலை வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலையத்தில் உள்ள மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
Samayam Tamil திருச்சி விமான நிலையம்
தங்கம் கடத்தி வந்த கேரளா ஆசாமி திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார்


அப்போது கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த மொய்தீன் குட்டி (49) என்பவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது. இதனால் சுங்கத் துறை அதிகாரிகள் உடனடியாக அவரை தனியே அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் தனது உடலில் மறைத்து ரூ.11 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலான 232 கிராம் தங்கத்தை எடுத்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி