ஆப்நகரம்

Corona Dry Run Trichy: ஐந்து இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை உள்ளிட்ட ஐந்து இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்வு இன்று நடைபெற்றது.

Samayam Tamil 8 Jan 2021, 4:36 pm
கொரோனோ தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி முதற்கட்டமாக தமிழகத்தில் ஐந்து இடங்களில் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மேலும் ஐந்து மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்வு இன்று நடத்தப்பட்டது.
Samayam Tamil கொரோனா தடுப்பூசி ஒத்திகை
கொரோனா தடுப்பூசி ஒத்திகை -திருச்சி


திருச்சி மாவட்டத்தில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று நடத்தப்பட்ட ஒத்திகை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மருத்துவமனை முதல்வர் வனிதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் எட்வினா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை தவிர, மணப்பாறை அரசு மருத்துவமனை, இனாம் குளத்தூர், இராமலிங்க நகர் மற்றும் ஒரு தனியார் மருத்துவமனை என ஐந்து இடங்களில் இன்று இந்த சோதனை நடத்தப்பட்டது.

டிராக்டர் பிரச்சினை, தாயை கையால் அடித்து கொன்ற மகன்கள்!

ஒவ்வொரு இடத்திலும் 25 பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்வு நடத்தப்படுகிறது. தமிழக அரசின் உத்தரவை பொறுத்து அடுத்த கட்டமாக, விரைவில் அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

அடுத்த செய்தி