ஆப்நகரம்

பிறந்தநாள் கொண்டாடிய யானை… திரளாக பங்கேற்ற திருச்சி மக்கள்!

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் யானை அகிலாவின் 20-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்து மக்கள் வழிபாடு செய்தனர்.

Samayam Tamil 25 May 2022, 11:20 am
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில். இக்கோவிலில் அகிலா என்ற யானை கடந்த 11 வருடங்களாக சுவாமி, அம்பாள் திருமஞ்சன அபிஷேகத்திற்கு புனிதநீர் எடுத்து வருவது, உச்சிகால பூஜை மற்றும் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட உற்சவங்களில் ஈடுபட்டு இறை பணியாற்றி வருகிறது.
Samayam Tamil Trichy elephant birthday


யானை அகிலா 24.5.2002-ல் அஸாம் மாநிலத்தில் பிறந்தது. கடந்த 6.12.2011-ல் ஒரு தனியார் டிரஸ்ட் சார்பில் திருவானைக்காவல் கோவிலுக்கு வழங்கப்பட்டது. அகிலாவுக்கு கோயில் நந்தவனத்தில் நடைபாதை, நீச்சல் குளம் மற்றும் சேற்று மண்ணில் குளிப்பதற்காக 1,200 சதுர அடியில் சேற்று குளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அகிலாவுக்கு நேற்று 20-ஆவது பிறந்த நாள் என்பதால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் அகிலாவிற்கு அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு கஜ பூஜை செய்யப்பட்டது.
Tasmac: டாஸ்மாக் கடைகள் மூடல்; மதுப்பிரியர்கள் ஷாக்!

அதனைத் தொடர்ந்து அகிலாவுக்கு பிடித்தமான பழங்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், அர்ச்சகர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

அடுத்த செய்தி