ஆப்நகரம்

வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா உறுதி...

திருச்சி திமுக திருவரம்பூர் வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 Apr 2021, 12:21 pm
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமெடுத்துள்ளது. இந்த சூழலில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கொரோனா தொற்று காரணமாக கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
Samayam Tamil வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா உறுதி...


தேர்தல் நேரத்தில் முறையான பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காததே இப்படி தலைவர்கள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதாவராவ் கொரோனா பாதிப்பு காரணமாகச் சமீபத்தில் உயிரிழந்தார்.

அதன் தொடர்ச்சியாகத் திருச்சி திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி உடல் நலக் குறைவு காரணமாகத் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

புத்தாண்டும் அதுவுமான இப்படியொரு அறிவிப்பு... திருச்சி ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம்!

பரிசோதனையில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

அடுத்த செய்தி