ஆப்நகரம்

ஒரே நாளில் 3 இளம்பெண்கள் மிஸ்ஸிங் - திருச்சியில் பரபரப்பு!

திருச்சி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் மூன்று பெண்கள் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 May 2022, 11:28 am
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் போதிலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. குறிப்பாக அண்மை காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் தொல்லை உள்ளிட்ட சம்பவம் அதிகரித்து வருகிறது.
Samayam Tamil Trichy women missing
கோப்புப்படம்


இந்தநிலையில், திருச்சி திருவானைக்காவல் கீழக்கொண்டையன் பேட்டை பகுதியை சேர்ந்த சண்முகம் - பூங்கொடி தம்பதியின் மகள் ராஜேஸ்வரி (வயது 19). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பல்வேறு இடங்களில் தேடிய பெற்றோர், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதேபோல், திருச்சி பாலக்கரை காஜாபேட்டை பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி பாத்திமா ( வயது 36). இவர், திருமண வீடுகளில் சமையல் வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது மகன் சூர்யா அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மணிகண்டம் அருகே உள்ள மட்டைபாறைப்பட்டி அன்பு நகரை சேர்ந்த கோபால் என்பவரின் மகள் விசித்திரா( வயது 22) விராலிமலையில் உள்ள தனியார் உணவு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். மே 20-ம் தேதி பணிக்கு சென்ற விசித்திரா வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி