ஆப்நகரம்

ஜவ்வாய் இழுத்துக் கொண்டிருக்கும் வழக்குகளை உடனே முடித்துக் கொள்ள அரிய வாய்ப்பு!

நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனே தீர்வு காணும் நோக்கில், லோக் அதாலத் திருச்சியில் சனிக்கிழமை (டிசம்பர் 12) நடைபெற உள்ளது.

Samayam Tamil 10 Dec 2020, 6:33 pm
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணையின்படி, நாளை மறுநாள் (டிசம்பர் 12), திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் மீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்க்கும் முயற்சியாக தேசிய மக்கள் மன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
Samayam Tamil கோப்பு படம்
லோக் அதாலத் -திருச்சி


குறிப்பாக சொத்து வழக்குகள், வங்கி கடனுதவி, தனிநபர் கொடுக்கல் - வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள், திருமண உறவு தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகள் (சமாதானமாக போகக்கூடிய வழக்குகள்) ஆகியவற்றில் தீர்வு காணலாம்.

லோக் அதாலத்தில் பங்கேற்போர் நீதிமன்ற கட்டணமாக செலுத்தியுள்ள முழுத் தொகையையும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். சமரசமான அன்றைய தினமே தீர்ப்பு நகலை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.. தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது. இரு தரப்பினர்களுக்கிடையே வெற்றி- தோல்வி என்ற பாகுபாடு ஏற்படாது.

இது என்னங்க அநியாயம்? - மாநகராட்சி மீது திருச்சி மக்கள் கோபம்!

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு (A.D.R.வளாகம்) அலுவலகத்தில் சமரச தீர்வு தினந்தோறும் நடைபெற்று வருகிறது.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருச்சிராப்பள்ளி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2460125 என்ற தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

அடுத்த செய்தி