ஆப்நகரம்

கடத்தல் தங்கம்... இன்றைய பறிமுதல் விவரம்!

துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிகளிடமிருந்து மொத்தம் 73 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,422 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Samayam Tamil 22 Dec 2020, 9:22 pm
துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் மத்திய வருவாய் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
Samayam Tamil கோப்பு படம்
திருச்சி விமான நிலையம் - கடத்தல் தங்கம் பறிமுதல்


அப்போது துபாய் இருந்து திருச்சி வந்த அப்துல் ரசாக் (40) என்ற பயணியிடமிருந்து 1,173 கிராம் கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டது.

இதேபோன்று, சிங்கப்பூரில் இருந்து வந்த ரவிச்சந்திரன் (34) என்பவரை அதிகாரிகள் சோதனை செய்ததில் அவரிடம் 249 கிராம் தங்கம் சிக்கியது.

கள்ள சாவி போட்டு திருட முயற்சி... சிறுவர்களை அள்ளிய போலீஸ்!

இரு பயணிகளிடம் இருந்தும் 73 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொத்தம் 1,422 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி