ஆப்நகரம்

2-ஏ பேரு ரூ. 2 லட்சம் குவாட்டர் பாட்டில்: திருச்சியை அதிரவிட்ட ஊரடங்கு வழக்கு!

ஊரடங்கு நேரத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்ய 2 லட்சம் மதிப்புள்ள ஆயிரத்து 780 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 14 May 2021, 1:16 pm
திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி, ஊரடங்கு அமலில் உள்ளபோது டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே மது பாட்டில்களைக் கள்ளச்சந்தையில் விற்பனைச் செய்வதைத் தடுக்க அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் சுதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Samayam Tamil 2-ஏ பேரு ரூ. 2 லட்சம் குவாட்டர் பாட்டில்: திருச்சியை அதிரவிட்ட ஊரடங்கு வழக்கு!


இந்நிலையில் திருச்சி முதலியார் சத்திரம் அருகில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்படி திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் மற்றும் பாலகரையைச் சேர்ந்த காளிமுத்து ஆகியோரைக் கைது செய்தனர்.
கொரோனா டெஸ்ட்... வீட்டு வாசலுக்கே வரும் திருச்சி மாநகராட்சி!
அவர்களிடமிருந்து ரூ 2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள ஆயிரத்து 780 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி