ஆப்நகரம்

6,876 வாகனங்கள் திருச்சியில் பறிமுதல்: திருப்பி தருமா போலீஸ், வெளியானது அறிக்கை!

திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களிடம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில் அவை எப்போது திரும்பி வழங்கப்படும் நேரம் எப்போது என்பது குறித்து மாவட்ட போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Samayam Tamil 6 Jun 2021, 6:26 pm
திருச்சி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த சூழலில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil 6,876 வாகனங்கள் திருச்சியில் பறிமுதல்: திருப்பி தருமா போலீஸ், வெளியானது அறிக்கை!


அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து திருச்சி மாநகரில் இருசக்கரம், ஆட்டோ, கார்கள் எனக் கடந்த மே மாதம் 15ஆம் தேதி வரையிலான 22 நாட்களில் 6 ஆயிரத்து 566 இருசக்கர வாகனங்கள், 188 மூன்று சக்கர வாகனங்கள், 73 கார்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 876 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் திருச்சி கேகே நகர் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது வாகனங்களின் பாதுகாப்பு கருதி வஜ்ரா வாகன உதவியுடன் தண்ணீர் தெளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நாளை முதல் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களைத் திருப்பி ஒப்படைக்க மாநகர போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நாங்க ரெடி...கொரோனாவுக்கு சவால்விடும் அமைச்சர்!
அதன்படி முதற்கட்டமாக 15ஆம் தேதி முதல் 18ம் தேதி வரை பறிமுதல் செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாளை(7ஆம் தேதி) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்தந்த வாகன உரிமையாளர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கப்படும் பணி நடக்கிறது.

அதைத் தொடர்ந்து படிப்படியாகத் தேதி வாரியாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

அடுத்த செய்தி