ஆப்நகரம்

வீரமலைப்பாளையம் பகுதிக்கு 8 நாள் பொதுமக்கள் செல்லத் தடை - திருச்சி ஆட்சியர் அறிவிப்பு!

வீரமலைப்பாளையத்தில் 8 நாட்கள் துப்பாக்கிச்சுடும் பயிற்சி நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 3 Jun 2022, 6:46 am
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில், ஜூன் 3-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் இரவு 07.00 மணி முதல் 10.00 மணி வரை The CICE, DEPOT BN MEG & CENRE, BANGALORE Unit பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது.
Samayam Tamil collector sivarasu


இதனால் அந்த பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி