ஆப்நகரம்

திருச்சி கலெக்டர் போட்ட உத்தரவு… அதிர்ந்துபோன அரசியல் கட்சிகள்!

தேர்தல் நடத்தை விதிகளை மீறி அதிக நபர்கள் மற்றும் பள்ளி சிறுவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 28 Jan 2022, 3:47 pm

ஹைலைட்ஸ்:

  • பள்ளி மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தக்கூடாது
  • அரசியல் கட்சிகளுக்கு திருச்சி ஆட்சியர் எச்சரிக்கை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil trichy collector sivarasu
திருச்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சிவராசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் சிவராசு கூறியதாவது:
"திருச்சி மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 5 நகராட்சி மற்றும் 14 பேரூராட்சிகளில் மொத்தம் 1,262 வாக்கு சாவடிகளில் தேர்தல் நடைபெறும். இதில், 10,58,674 பேர் வாக்களிக்க உள்ளது. மாவட்டத்தில் பதட்டமான வாக்குச் சாவடிகள் என 157 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு நுண் பார்வையாளர்கள் மற்றும் வெப் கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து வாகுச்சாவடிகளுக்கும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 1518 ஈவிஎம் கருவிகள் திருச்சி மாவட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ளது. தேர்தலை கண்காணிக்க 20 தேர்தல் உள்ளூர் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பிரச்சரத்தில் இருச்சக்கர வாகனம் அனுமதி கிடையாது.

தேர்தல் பரப்புரையின் போது குறிப்பிட்ட மூன்று பேர் மட்டுமே அனுமதி என்பது புதிய நடைமுறை? ஆனால் அதனை மீறி விட்டு கூட்டமாக சேர்ந்து பிரச்சாரம் செய்தாலோ, பள்ளி மாணவ, மாணவிகளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோடு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி மாவட்டத்தில் மூன்றாவது அலை கொரோனா பரவல் இன்னும் உள்ளது. டெல்டா வகை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஐ.சி.யூ செல்வோர்கள் எண்ணிக்கை திருச்சியில் அதிகரித்து வருகிறது. இதனால், அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

அடுத்த செய்தி