ஆப்நகரம்

மட்டன் கடை ஓனர்களுக்கு திருச்சி மாநகராட்சி எச்சரிக்கை!

திருச்சி மாநகரில் இயங்கிவரும் இறைச்சி கடைகளின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 21 Jan 2021, 8:42 pm
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி விற்பனை செய்யும் இறைச்சி கடை உரிமையாளர்கள், தங்களது கடைகளில் விற்பனை செய்யும் ஆடுகளை காந்தி சந்தை அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஆடு வதைக் கூடத்தில், கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்ய வேண்டும்.
Samayam Tamil கோப்பு படம்
மட்டன் கடைகள் -திருச்சி


அதன் பின்னரே அவற்றை அறுத்து சீல் செய்த பின்பு தான் ஆட்டிறைச்சியை விற்பனை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் விற்பனை செய்யப்படும் ஆட்டிறைச்சிகள் பறிமுதல் செய்யப்படும்.

அத்துடன் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 ன் கீழ் மட்டன் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி