ஆப்நகரம்

திருச்சி லூர்து மாதா ஆலய திருவிழா ஜல்லிக்கட்டு; முன்னாள் அமைச்சர் பங்கேற்பு!

திருச்சியில் லூர்து மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 500 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 16 May 2022, 6:06 pm

ஹைலைட்ஸ்:

  • மண்ணச்சநல்லூர் அருகே புனித லூர்து மாதா ஆலய திருவிழா
  • 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்ற ஜல்லிக்கட்டு
  • அதிமுக முன்னாள் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ஜல்லிக்கட்டு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள மேட்டு இருங்களூரில் புனித லூர்து மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.
மேட்டு இருங்களூரில் உள்ள புனித லூர்து மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டியை லால்குடி வருவாய் கோட்டாச்சியர் வைத்தியநாதன் துவங்கி வைத்தார். முன்னதாக வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பேருந்து கட்டணம் உயரப் போகிறதா? அமைச்சர் கே.என். நேரு பதில்!

இந்த போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பரபரப்பாக நடைப்பெற்ற போட்டியில் ஒரு சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் இருந்தாலும், ஒரு சில காளைகளை வீரர்கள் அடக்கினார். போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக அதிமுக முன்னாள் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டு பேரவையின் மாநிலத் தலைவர் ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் லால்குடி டிஎஸ்பி சீதாராமன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி